» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 3 இடங்களில் தீவிபத்து

புதன் 3, செப்டம்பர் 2025 4:13:14 PM (IST)



தூத்துக்குடியில் 3 இடங்களில் ஏற்பட்ட தீவிபத்துகளில் சிப்காட் தீயணைப்பு நிலைய விரைந்து சென்று தீயை அணைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர். 

தூத்துக்குடி திம்மராஜபுரம் பகுதியில் ஜெயசிங் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் காய்ந்த புற்கள் மற்றும் முள்செடிகள் தீப்பிடித்து எரிந்தன. கூட்டாம்புளி, சிறுபாடு அருகே சுந்தர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் முள்செடிகள் காய்ந்த செடிகள் தீப்பிடித்து எரிந்தன.

மேலும், மடத்தூர் இபி காலனியில் முள்செடிகள் குவித்து ஒதுக்கி வைக்கப்பட்ட உடை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீவிபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் த.கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று பல மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து முற்றிலும் அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory