» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல புதிய பேராயராக ஐசக் வரபிரசாத் நியமனம்!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 5:48:20 PM (IST)
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திர மாநிலம், ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல பொறுப்பு பேராயராக கோவை பேராயர் தீமோத்தி ரவிந்தர் கடந்த ஜீலை மாதம் முதல் பதவிப் பொறுப்பேற்று இருந்து வந்த நிலையில், திடீரென சி.எஸ்.ஐ. பிரதம பேராயர் கே. ரூபன் மார்க் ஆணையின் படி, தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயராக ஆந்திரா ராயலசீமா திருமண்டல பேராயர் ஐசக் வரபிரசாத் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவி பொறுப்பேற்க இன்று ஆந்திராவிலிருந்து தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை புரிந்த திருமண்டல பொறுப்பு பேராயர் ஐசக் வரபிரசாத்தை முன்னாள் நிர்வாகிகள் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் பிரேம்குமார் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பெருமன்ற மற்றும் சபை பிரதிநிதிகள் தேர்தல் வருகிற செப்டம்பர் 7ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பொறுப்பு பேராயர் மாற்றப்பட்டுள்ளது திருமண்டல மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆன்லைன் லாட்டரி விற்பனை: வாலிபர் கைது; செல்போன் பறிமுதல்!
திங்கள் 8, ஜூன் 2026 11:07:04 AM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)










