» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சின்னகண்ணுபுரம் பகுதியில் சாலையை சீரமைக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 2, செப்டம்பர் 2025 12:05:36 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி சின்னகண்ணுபுரம் பகுதியில் பிரதான சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி 14வது வார்டு சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் சில நாள்களுக்கு முன்பு மழைநீர் செல்வதற்கு ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது. அப்பணியின் போது இருந்த 15 அடி ரோடு 7 அடியாக மாறியது. இதனால் அந்த சாலையில் செல்லும் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,பொதுமக்கள்,வியாபாரிகள் என பலருக்கு விபத்துக்கள் நேரிடுகிறது.
2023ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் இந்த சாலை அதிகளவில் பாதிக்கப்பட்ட பொழுது இதனை சரி செய்யவில்லை. மேலும் தற்பொழுது இச்சாலை முழுவதும் பாதிக்கப்பட்டு உள்ளது ஆகையால் இதில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)

பாலியல் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தவெக எம்.எல்.ஏ மிரட்டல் - இளம்பெண் பரபரப்பு பேட்டி!
திங்கள் 8, ஜூன் 2026 8:10:55 AM (IST)











MAKKALSep 2, 2025 - 02:52:34 PM | Posted IP 172.7*****