» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் : திரளானோர் பங்கேற்பு!

வியாழன் 31, ஜூலை 2025 5:51:08 PM (IST)



நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் நடந்த ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டத்தில் சபை மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அசெம்பிளி ஆஃப் காட் சபையில் ஆவிக்குரிய எழுப்புதல் கூட்டம் 3 நாட்கள் நடந்தது. கூட்டத்தை தூத்துக்குடி பிராந்திய ஏஜி சபைகளின் மேற்பார்வையாளரும், நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகருமான சங்கை எட்வின் பிரபாகர் தலைமை வகித்து ஜெபித்து தொடங்கி வைத்தார். பாஸ்டர் சங்கை டேவிட் மெர்வின் பிரபாகர் பாடல் ஆராதனை நடத்தினார்.

தினமும் மாலை 6.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை கூட்டம் நடந்தது. எழுப்புதல் ஆராதனை, எழுப்புதல் செய்தி, எழுப்புதல் ஜெப நேரம் இடம் பெற்றன. கன்னியாகுமரி பாஸ்டர் ஜஸ்டின் மோசஸ் தேவ செய்தி கொடுத்தார். இதில் நாசரேத், மூக்குப்பீறி ,கடையனோடை, பிரகாசபுரம், மெஞ்ஞானபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நாசரேத் ஏஜி சபையின் தலைமை போதகர் சங்கை எட்வின் பிரபாகர் மற்றும் சபை விசுவாசிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory