» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திமுக வழக்கறிஞர் அணி முன்னாள் நிர்வாகி பாஜகவில் ஐக்கியம்!

புதன் 30, ஜூலை 2025 3:43:52 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட திமுக  வழக்கறிஞர் அணி முன்னாள் பொறுப்பாளரான ஜனார்த்தனன் அக்கட்சியில் இருந்து விலகி பா.ஜ.வில் இணைந்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூர் முத்துகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர் மறைந்த அரசு வழக்கறிஞரான தாமோதரன் மகன் ஜனார்த்தனன். சி.எஸ்.ஐ., கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்த இவர், தூத்துக்குடி திமுக ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

மறைந்த முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமியின் தீவிர ஆதரவாளர். அதன் பின்பு தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை பொறுப்பாளராக இருந்து வந்தார். இந்நிலையில், ஜனார்த்தனன் அக்கட்சியில் இருந்து விலகி மாநில பா.ஜ., துணைத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான ஆர்.சி.பால் கனகராஜ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்துள்ளார்.

பா.ஜ.,வில் இணைந்துள்ள வழக்கறிஞர் ஜனார்த்தனனுக்கு மாநில சிறுபான்மையினர் அணி துணைத்தலைவர் அசோக்குமார், தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா, மாவட்ட துணைத் தலைவர்களான வழக்கறிஞர்கள் வாரியர், ஸ்ரீவை முத்துராமலிங்கம், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜோதி டேவிட், மும்பை வழக்கறிஞர் கடோர் கஜோன்நாடார், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட பா.ஜ.,வினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory