» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விளையாட்டு போட்டி
சனி 5, ஜூலை 2025 4:12:24 PM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கல்லூரி முதல்வர் டாக்டர் சோபியா ஞானமேரி தலைமை வகித்து கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். கல்லூரி அலுவலக ஊழியர் ஜாய்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். போட்டிகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் நடத்தினர்.
இதையடுத்து மாணவ மாணவிகளுக்கு 100 மீட்டர்,400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து, எறிப்பந்து, ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம், திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா, திருமண்டல நிர்வாக செயலாளர் கருணாகரன், கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி, மாணவர் செவிலியர் சங்க தலைவர் பேராசிரியர் ரூபன் காலிசன், உதவி பேராசிரியை ப்ரூலின் மெல்சியா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - தாம்பரம் இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள்: ஏப். 20 முதல் இயக்கம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 8:11:58 PM (IST)

தூத்துக்குடியில் ஜேசிஐ ஹெர்குலேனியம் எலைட் சார்பில் நீர் மோர் விநியோகம்!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:42:12 PM (IST)

சட்டவிரோத புகையிலை விற்பனை: 3 பேர் கைது
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:31:01 PM (IST)

தமிழகத்தில் 300% வன்கொடுமைகள் அதிகரிப்பு: விளாத்திகுளத்தில் குஷ்பூ அதிரடி பேச்சு!
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:15:07 PM (IST)

ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் தேரோட்டம்: அச்சுத்தடி உடைந்ததால் பரபரப்பு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 5:00:15 PM (IST)

வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி நிறைவு: ஆட்சியர் ஆய்வு
வெள்ளி 17, ஏப்ரல் 2026 3:30:05 PM (IST)





