» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விளையாட்டு போட்டி
சனி 5, ஜூலை 2025 4:12:24 PM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கல்லூரி முதல்வர் டாக்டர் சோபியா ஞானமேரி தலைமை வகித்து கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். கல்லூரி அலுவலக ஊழியர் ஜாய்சன் ஆரம்ப ஜெபம் செய்தார். போட்டிகளை நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் தனபால், சுஜித் செல்வசுந்தர் ஆகியோர் நடத்தினர்.
இதையடுத்து மாணவ மாணவிகளுக்கு 100 மீட்டர்,400 மீட்டர் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கைப்பந்து, எறிப்பந்து, ஈட்டி எறிதல், தட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில் ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் நீதிபதி ஜான் சந்தோஷம், திருமண்டல பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் தாளாளர் ரமா, திருமண்டல நிர்வாக செயலாளர் கருணாகரன், கல்லூரி முதல்வர் சோபியா ஞானமேரி, மாணவர் செவிலியர் சங்க தலைவர் பேராசிரியர் ரூபன் காலிசன், உதவி பேராசிரியை ப்ரூலின் மெல்சியா மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 3:07:14 PM (IST)

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூர கொலை : நண்பர் வெறிச்செயல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:30:43 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா : கனிமொழி எம்பி மரியாதை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:37:35 AM (IST)

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாப சாவு
செவ்வாய் 15, ஜூலை 2025 10:04:56 AM (IST)

கார் மோதி மருந்து நிறுவன பெண் ஊழியர் சாவு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:25:45 AM (IST)
