» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி. துறைமுகத்தில் காற்றாலை, சோலார் மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி!
சனி 5, ஜூலை 2025 8:47:32 AM (IST)
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சூரிய மின்நிலையம், காற்றாலை மூலம் 32½ லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் சுத்தமான மற்றும் பசுமை துறைமுகமாக மாற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதன்படி வ.உ.சி. துறைமுகத்தில் 5 மெகாவாட் தரையில் பொருத்தப்பட்ட சூரிய மின்நிலையம், 2 மெகாவாட் காற்றாலை மின்நிலையம், 1.04 மெகாவாட் மேற்கூரை சூரிய மின்நிலையம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் துறைமுகத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் வ.உ.சி துறைமுகம் 35 லட்சத்து 62 ஆயிரத்து 839 யூனிட் மின்சாரத்தை சூரிய மின் ஆலை மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்து உள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 27 லட்சத்து 36 ஆயிரத்து 229 யூனிட்டுன் ஒப்பிடும் போது, 30 சதவீதம் அதிகம் ஆகும். இது வ.உ.சி. துறைமுகத்தின் நிலைத்தன்மை மற்றும் சுத்தமான எரிசக்தி ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான உறுபாட்டை பிரதிபலிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 3:07:14 PM (IST)

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூர கொலை : நண்பர் வெறிச்செயல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:30:43 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)

தூத்துக்குடியில் காமராஜரின் பிறந்த நாள் விழா : கனிமொழி எம்பி மரியாதை!
செவ்வாய் 15, ஜூலை 2025 10:37:35 AM (IST)

மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாப சாவு
செவ்வாய் 15, ஜூலை 2025 10:04:56 AM (IST)

கார் மோதி மருந்து நிறுவன பெண் ஊழியர் சாவு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:25:45 AM (IST)

முட்டாள்Jul 5, 2025 - 12:43:48 PM | Posted IP 162.1*****