» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை : மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை மேயர் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 11:43:23 AM (IST)

தூத்துக்குடி தபால் தந்தி காலனியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியினை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில், "தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோடை காலத்தை முன்னிட்டும் சீரான குடிநீர் வழங்குவதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக தபால் தந்தி (P&T) காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு வருகின்ற நீரின் அளவையும் மாநகரப் பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவையும் பார்வையிட்டு ஆய்வு செய்தேன்.
மேலும் இந்த பகுதிகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு சீரான குடிநீர் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஆய்வின்போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாமன்ற உறுப்பினர்கள் கண்ணன், ராமர் ஆகியோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் : இந்து முன்னணி கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 5:54:56 PM (IST)

கனிமவள கொள்ளை, ஆக்கிரமிப்புகளை தடுக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 4:54:50 PM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம்: டிச.13ல் செயற்குழு உறுப்பினர் தேர்தல்!
வியாழன் 11, டிசம்பர் 2025 4:02:26 PM (IST)

மேல்மருவத்தூர் தைப்பூச இருமுடி விழா: செவ்வாடை பக்தர்கள் சக்தி மாலை அணிந்து விரதம் தொடக்கம்!
வியாழன் 11, டிசம்பர் 2025 3:51:55 PM (IST)

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்
வியாழன் 11, டிசம்பர் 2025 3:18:36 PM (IST)

மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா: தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் கீதாஜீவன் மரியாதை
வியாழன் 11, டிசம்பர் 2025 12:51:17 PM (IST)











RAMAR P BRAYANT NAGAR 11TH ST TUTICORINJul 6, 2025 - 03:06:30 PM | Posted IP 104.2*****