» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் கொலை வழக்கில் 4பேரை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு
திங்கள் 9, ஜூன் 2025 4:13:05 PM (IST)

பெண் கொலை வழக்கில் 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்துவந்த நிலையில், தீவிர விசாரணை நடத்தி 4பேரை கைது செய்த தனிப்படை காவல் துறையினருக்கு எஸ்பி ஆல்பர்ட் ஜான் பாராட்டு தெரிவித்தார்.
நாலாட்டின்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த பெண் கொலை வழக்கில் கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் குறித்து 2 ஆண்டுகள் தீர்வின்றி இருந்து வந்த நிலையில மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 எதிரிகளை கடந்த (07.06.2025) கைது செய்தனர்.
மேற்படி கொலை வழக்கில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு எதிரிகளை கைது செய்த மேற்படி தனிப்படை காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இன்று (09.06.2025) சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கொரியர் பார்சலில் வந்த 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் : போலீசார் விசாரணை!
வியாழன் 11, டிசம்பர் 2025 9:19:00 PM (IST)

காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை எதிர்த்து பார் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:54:06 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி மயானத்தில் குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:46:53 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்பி பாராட்டு!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:30:35 PM (IST)

உயர் மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் சேதம் : இழப்பீடு வழங்க மக்கள் கோரிக்கை!
வியாழன் 11, டிசம்பர் 2025 8:24:52 PM (IST)

ஓய்வூதியப் பலன்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வியாழன் 11, டிசம்பர் 2025 8:18:53 PM (IST)










