» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாதாள சாக்கடைக்குள் விழுந்து தூய்மை பணியாளர் சாவு : திருச்செந்தூரில் பரிதாபம்
ஞாயிறு 8, ஜூன் 2025 12:08:08 PM (IST)
திருச்செந்தூரில் பாதாள சாக்கடைக்குள் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நாளை வைகாசி விசாகம் திருவிழா நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நகராட்சி சார்பில் நகர் முழுவதும் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து தூய்மை பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
இந்நிலையில், திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் ரோட்டில் சாக்கடையாக ஓடிக் கொண்டிருந்தது. இதனை சுத்தம் செய்யும் பணியில் இதில், நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ஆலடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளரான சுடலைமணி (40) ஈடுபட்டுக் கொண்டிருந்தார்
அவர் கழிவுநீர் உறிஞ்சும் குழாயை பாதாள சாக்கடைக்குள் செலுத்தியபோது, எதிர்பாராதவிதமாக தலைகுப்புற பாதாள சாக்கடைக்குள் விழுந்து விட்டார். இதனைப் பார்த்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை மீட்க முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, பாதுகாப்பு உபகரணங்களுடன் பாதாள சாக்கடையில் இறங்கி சுடலைமணியை மீட்டனர்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுடலைமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூரில் கழிவுநீரை அகற்றியபோது பாதாள சாக்கடையில் தவறி விழுந்து தூய்மை பணியாளர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)

நன்றிJun 8, 2025 - 06:17:13 PM | Posted IP 162.1*****