» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் வைத்து கடந்த 21.04.2025 அன்று  திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா (எ) ராஜா (28) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி S.S மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான மரிய சூசை ஸ்டாலின் மகன் சிலுவை ஆகாஷ் (எ) ஆகாஷ் (24), தாசன் மகன் நக்சன் (20), 

லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் மரிய தாமஸ் டினோ (எ) டினோ (24), கீழ அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் மைக்கேல் ஜோவின் (எ) ஜோவின் (19) ஆகிய  4 எதிரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் உத்தரவின் பேரில் நேற்று  வடபாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education

Arputham Hospital







Thoothukudi Business Directory