» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு : எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 9, மே 2025 7:56:32 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அடுக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கூடுதல் ஆயுதமேந்திய விரைவு அதிரடி படைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பணியாளர்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. விமான நிலைய எல்லைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கூடுதல் ஆயுதமேந்திய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அண்மையில் நடத்தப்பட்ட விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகையின் கூறுகள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!!
வெள்ளி 23, மே 2025 5:00:18 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழ்வாய்வு: ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் தொடங்கியது!
வெள்ளி 23, மே 2025 4:51:56 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதி : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
வெள்ளி 23, மே 2025 4:22:20 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 23, மே 2025 4:02:59 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை
வெள்ளி 23, மே 2025 3:47:36 PM (IST)
