» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வு

வெள்ளி 9, மே 2025 12:39:48 PM (IST)



தூத்துக்குடியில் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்தி பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

தூத்துக்குடி தருவைக்குளத்தில் குழந்தைகளுக்கான விடுமுறை வேதாகம பள்ளி நிகழ்வு நடைபெற்றது. பங்குதந்தை வின்சென்ட் அடிகளார் ஆசியிரை வழங்கினார். சிறார்களிடையே அலைபேசி பயன்படுத்துவதை தவிர்த்து புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதை வலியுறுத்தி புத்தக வாசிப்பு நற்பணி மன்றம், கலையின் குரல் அமைப்பு மற்றும் குமிழ் முனை புத்தக வாசிப்பு வண்டி இணைந்து பொம்மலாட்ட கலை நிகழ்ச்சி குழு சார்பில் நடைபெற்றது.

பொம்மலாட்ட குழுவில் அரங்கம் மற்றும் நாட்டுப்புற கலைப் பயிற்றுநர் கலைவளர்மணி ப.சக்தவேல், குமிழ்முனை சைமன், வீதிநாடகக் கலைஞர் அருண்பாமா, எழுத்தாளர் ஆ.மாரிமுத்து ஆகியோர் சிறார்களுக்கு பொம்மலாட்டம் நிகழ்வு நடத்திக் காட்டி மகிழ்வித்தனர். இந்நிகழ்வில் திரளனான குழந்தைகள் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, அருட்சகோதரிகள், சபை மக்கள், ஊர் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors



Arputham Hospital



CSC Computer Education




Thoothukudi Business Directory