» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3பேர் கைது!
வெள்ளி 9, மே 2025 11:43:00 AM (IST)
தூத்துக்குடியில் மளிகைக் கடை உரிமையாளர் கொலை தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி குருவித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பொங்கல்ராஜ் (43). இவர் முத்தையாபுரம் சுந்தர் நகரில் காய்கனி மற்றும் பல சரக்கு கடை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவரை மர்ம நபர்கள் கல்லால் கொலை செய்தனர். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கோயில் திருவிழாவின்போது அங்கு பொங்கல்ராஜுக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக முக்காணி குருவித்துறையைச் சேர்ந்த மாசானமுத்து மகன் புலமாட முத்து (32), மாரிமுத்து மகன் நாகராஜன் (19), சங்கர் மகன் ஜெயராஜ் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!!
வெள்ளி 23, மே 2025 5:00:18 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழ்வாய்வு: ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் தொடங்கியது!
வெள்ளி 23, மே 2025 4:51:56 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதி : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
வெள்ளி 23, மே 2025 4:22:20 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 23, மே 2025 4:02:59 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை
வெள்ளி 23, மே 2025 3:47:36 PM (IST)
