» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3பேர் கைது!
வெள்ளி 9, மே 2025 11:43:00 AM (IST)
தூத்துக்குடியில் மளிகைக் கடை உரிமையாளர் கொலை தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி குருவித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பொங்கல்ராஜ் (43). இவர் முத்தையாபுரம் சுந்தர் நகரில் காய்கனி மற்றும் பல சரக்கு கடை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவரை மர்ம நபர்கள் கல்லால் கொலை செய்தனர். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கோயில் திருவிழாவின்போது அங்கு பொங்கல்ராஜுக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக முக்காணி குருவித்துறையைச் சேர்ந்த மாசானமுத்து மகன் புலமாட முத்து (32), மாரிமுத்து மகன் நாகராஜன் (19), சங்கர் மகன் ஜெயராஜ் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை!
புதன் 14, ஜனவரி 2026 8:48:48 PM (IST)

வடவல்லநாடு ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா : ஆட்சியர் க.இளம்பகவத் பங்கேற்பு
புதன் 14, ஜனவரி 2026 4:31:16 PM (IST)

தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் 16ம் தேதி பொங்கல் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி
புதன் 14, ஜனவரி 2026 4:06:44 PM (IST)

தூத்துக்குடியில் மினி பஸ் டிரைவரை தாக்கிய 2பேர் கைது
புதன் 14, ஜனவரி 2026 3:57:03 PM (IST)

பிப்-12ல் அகில இந்திய பொது வேலைநிறுத்தம் : தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆலோசனை!
புதன் 14, ஜனவரி 2026 3:38:50 PM (IST)

பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)








