» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் : 2பேர் கைது!

வியாழன் 8, மே 2025 11:05:57 AM (IST)



தூத்துக்குடியில் சரக்கு வாகனத்தில் 1½ டன் ரேஷன் அரிசியை கடத்தியதாக டிரைவர் உட்பட 2பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜ் தலைமையில் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, ஈசிஆர் சாலையில் வந்த சரக்கு வாகனத்தை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். 

அந்த வாகனத்தில் சட்ட விரோதமாக 1½ டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசியை வாகனத்துடன் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த வாகனத்தின் டிரைவர் நிர்மல்ராஜ் (31),  லோடுமேன் ஜெயராம் (31) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory