» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காரில் வந்த தொழிலதிபர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை
திங்கள் 14, ஏப்ரல் 2025 10:37:53 AM (IST)
வல்லநாடு அருகே காரை ஓட்டிவந்தபோது, தொழிலதிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்தவர் அழகு பாண்டியன் மகன் சுரேஷ் (52), தொழிலதிபரான இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று வல்லநாட்டில் உள்ள ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் வல்லநாட்டில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
காரை சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். வல்லநாடு பாலம் வந்தபோது சுரேஷ் திடீரென நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு காருக்குள் மயங்கிவிட்டாராம். இதையடுத்து அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
