» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் உயிரிழப்பு

வியாழன் 13, மார்ச் 2025 10:36:38 AM (IST)

தூத்துக்குடியில் பைக் விபத்தில் காயமடைந்த வாலிபர் சிசிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த தாமஸ் மகன் லூா்து டெல்வின் (22). இவா்,  நேற்று முன்தினம் இரவு தூத்துக்குடி-எட்டயபுரம் சாலையில் பைக்கில் சென்றாராம். அப்போது, எதிர்பாராத விதமாக பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இதில், படுகாயமடைந்த அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா், அவா் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா்  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வடபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

ரிட்டாMar 13, 2025 - 09:50:42 PM | Posted IP 172.7*****

பைக்கில்செல்லும்போதுகவனம்மாஇருக்கானும்நம்மைக்காகுடும்பைம்இருக்குனுநினைக்கானுகையில்பைக்கிருந்என்னாஎப்பாடிவோண்னும்முனலும்ஓட்டாலாம

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory