» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஒரே நாளில் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!

வியாழன் 13, மார்ச் 2025 8:26:16 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் ஆர்.சி சர்ச் தெருவை சேர்ந்த மரியஜோசப் மகன் கிங்ஸ்டன் ஜெயசிங் (எ) வடை (23), 

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்கில் சம்பந்தப்பட்ட குரும்பூர், ஓடக்கரை பகுதியை சேர்ந்த சங்கர் மகன் முத்துராமலிங்கம் (25), 

கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கடம்பூர் அரண்மனை தெருவை சேர்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சுடலை கண்ணன் (39) மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி 2ம் கேட் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமலக்ஷ்மணன் (27) ஆகிய 4 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory