» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண் திடீர் மாயம்: போலீஸ் விசாரணை!

செவ்வாய் 11, மார்ச் 2025 11:14:38 AM (IST)

தூத்துக்குடியில் பயிற்சி மையத்திற்கு வந்த இளம்பெண் திடீரென காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல், கீழத் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் கோமள வசந்தி (25). இவர் தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் உள்ள போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். நேற்று காலை வகுப்பிற்கு வந்த அவர், 11 மணியளவில் அங்கிருந்து வெளியே சென்றுள்ளார். 

பின்னர் அவர் வீட்டிற்கு திரும்பிச் செல்லவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital

New Shape Tailors






Thoothukudi Business Directory