» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!

ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக வித்யா யாகம் நடைபெற்றது. 

தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் பக்தி பேரவை சார்பில் அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டி சிறப்பு வித்யாகம் நடைபெற்றது. 

வீரவநல்லூர் குலசேகர ராமானுஜம் மடம் ராமானுஜ ஜியர் சுவாமிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆசி உரை வழங்கினார். இதில் ஏராளமான பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில் மாணவ மாணவிகள் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்ட பேனா மற்றும் நெல்லிக்கனி வழங்கப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




CSC Computer Education



New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory