» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு யாகம்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:34:09 PM (IST)
தூத்துக்குடி சிவன் கோவிலில், அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காக வித்யா யாகம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் பக்தி பேரவை சார்பில் அரசு பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வேண்டி சிறப்பு வித்யாகம் நடைபெற்றது.
வீரவநல்லூர் குலசேகர ராமானுஜம் மடம் ராமானுஜ ஜியர் சுவாமிகள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஆசி உரை வழங்கினார். இதில் ஏராளமான பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பங்கேற்றனர். இதில் மாணவ மாணவிகள் பெயரில் அர்ச்சனை செய்யப்பட்டு பூஜை செய்யப்பட்ட பேனா மற்றும் நெல்லிக்கனி வழங்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
புதன் 26, மார்ச் 2025 10:24:20 AM (IST)

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)
