» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
படகு பழுதாகி நடுக்கடலில் தவித்த 6 மீனவர்கள் மீட்பு : விசைப்படகை மீட்கும் பணி தீவிரம்
செவ்வாய் 4, பிப்ரவரி 2025 3:37:57 PM (IST)

தூத்துக்குடியில் அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 6 மீனவர்கள் மற்றொரு மீன்பிடி படகில் சென்ற மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்திலிருந்து அந்தோணி ராஜ் என்பவரது விசைப்படகில் ஆழ்கடலில் மீன் பிடிக்க கடந்த 1ஆம் தேதி 6 மீனவர்கள் சென்றுள்ளனர். இவர்கள் திருச்செந்தூருக்கு கிழக்கே 30 கடல் மைல் தொலைவில் நடுக்கடல் பகுதியில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென படகில் ஏற்பட்ட பழுது காரணமாக கடல் நீர் உள்ளே புகுந்து விசைப்படகு மூழ்கத் துவங்கியுள்ளது.
இதை அடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மீனவர்களை தூத்துக்குடியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீட்டு தங்களது விசைப் படகில் ஏற்றி மீட்டு வந்துள்ளனர். மேலும், வலைகளையும் மீன்பிடி உபகரணங்களையும் பத்திரமாக தங்கள் படகில் ஏற்றி உதவி உள்ளனர். இதைத் தொடர்ந்து மூழ்கிய படகை கயிறு மூலம் கட்டி கரைக்கு பத்திரமாக இழுத்து வரும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
