» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆசிரியா் தம்பதி வீட்டில் 25 பவுன் தங்க திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

புதன் 22, ஜனவரி 2025 8:40:24 AM (IST)



கோவில்பட்டியில் ஆசிரியா் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் தங்க நகை மற்றும் ரூ.55 ஆயிரம் பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சாலைப்புதூரை அடுத்த இபி காலனியை சோ்ந்தவா் மாயகிருஷ்ணன் மகன் லட்சுமண பெருமாள் (41). இவரது மனைவி முத்துராமலட்சுமி. இருவரும் பள்ளி ஆசிரியா்கள்.

தம்பதி நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டாா்களாம். மாலையில் முத்துராமலட்சுமி வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த சுமாா் 25 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.55 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருப்பதாக அவா் தெரிவித்தாா். மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads



Arputham Hospital


New Shape Tailors





Thoothukudi Business Directory