» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவில் கடல் அரிப்புக்கு நிரந்தர தீர்வு: சுற்றுசூழல் ஆர்வலர் கோரிக்கை!
திங்கள் 20, ஜனவரி 2025 11:18:19 AM (IST)

திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடல் அரிப்பை தடுக்க தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் கடலுக்குள் நிரந்தர கடின கட்டுமானம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என சுற்றுசூழல் ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் வே.குணசீலன் வெளியிட்ட அறிக்கையில், "கடல் அரிப்பு என்பது அலைகள்,கடல் நீரோட்டம், காற்றின் திசை காரணமாக இயற்கையாக உலகம் முழுக்க கடற்கரை மண் அரித்து செல்லப்படும் இயற்கையான நிகழ்வு ஒன்று தான். பருவ நிலை மாறுபாடுகள் காரணமாக தற்போது உலகம் முழுக்க கடலரிப்பு அதிகமாக நிகழ்ந்து வருகிறத. ஆனால், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் நடக்கும் கடல் அரிப்பு என்பது முழுக்க முழுக்க மனித தவறுகளால் நடக்கும் ஒன்று ஆகும்.

குறிப்பாக உடன்குடி அனல்மின் நிலையத்துக்காக கல்லாமொழியில் 8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஒரு நிலக்கரி இறங்கு தளம் கடந்த 2018ம் ஆண்டு முதல் அமைக்கபட்டு வருகிறது. இதனால் கடல் அரிப்பு ஆலந்தலை பகுதியில் அதிகமானது, அதே நேரம் மணப்பாடு பகுதியில் மண்மேடுகள் அதிகமாகி மீனவ மக்கள் தொழிலுக்கு இடையூறு விளைவித்து வருகிறது.
ஆலந்தலை கிராமம் கடல் அரிப்பால் பாதிக்கபட்டதை தொடர்ந்து மீனவ மக்கள் குரல் எழுப்ப ஆலந்தலையில் 2021ம் ஆண்டு வாக்கில் தூண்டில் பாலம் ஒன்று அமைக்கபட்டது. ஆலந்தலையில் தூண்டில் பாலம் அமைக்க பட்ட பிறகு அமலி நகர் பகுதியில் கடல் அரிப்பு அதிகமானது. இதனை தொடர்ந்து அமலி நகர் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட தற்போது அமலி நகர் பகுதியில் தூண்டில் பாலம் அமைக்க 70% பணிகள் முடிவடைந்து விட்டது.
இதனால் திருச்செந்தூர் கோவில் பகுதியில் தற்போது அளவுக்கு அதிகமான கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது. இனி திருச்செந்தூர் கோவிலுக்கு பாதிப்பு ஏற்படாமல் கடலில் தடுப்பு சுவரோ, தூண்டில் பாலமோ கட்டினால் அது வீரபாண்டியன் பட்டினம் கடற்கரையை பாதிக்கும். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் கடல் அரிப்புக்கு தீர்வு தொடர்பான ஒரு ஆணை வெளியிட்டது. அதன்படி கடல் அரிப்பை தடுக்க கடலுக்குள் கடினமான கட்டுமானங்கள், தடுப்பு சுவர் போன்றவை கட்ட கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால் நடந்தது என்ன. அமளி நகர் பகுதி கடல் அரிப்பால் பாதிக்க பட்டதால் அங்குள்ள மீனவ மக்கள் போராடியதை தொடர்ந்து தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் தடுப்பு சுவர் கட்டுமான பணிகள், தூண்டில் பாலம் அமைக்க தடை என்பதால் நாங்கள் தூண்டில் வளைவு அமைக்கிறோம் என்று திட்டத்தின் பெயரை மட்டும் சற்றுமாற்றி நூதனமாக அனுமதி பெற்று பணிகள் நடந்தது.
இதனால் தான் தற்போது திருச்செந்தூர் கோவில் கடற்கரை கடல் அரிப்பால் பாதிக்கபட்டு உள்ளது. இனியும் கடல் அரிப்பால் திருச்செந்தூர் கடற்கரையை காக்க கடற்கரை மேலாண்மை சட்டங்களை பின்பற்றாமல், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணையை பின்பற்றாமல் கடினமான கட்டுமானங்களை நம் பகுதி கடலுக்குள் மேற்கொண்டால் வீரபாண்டியன் பட்டினம் கடற்கரையோ, காயல்பட்டினம் கடற்கரையோ கொம்பு துறையோ, சிங்கி துறையோ, புன்ன காயல் கடற்கரையோ அடுத்த கடல் அரிப்பால் பாதிக்கப்படும் என்பது தான் உண்மை.

தமிழக அரசும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இனி நம் பகுதி கடற்கரையை கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க கடலுக்குள் நிரந்தர கடின கட்டுமானம் அமைப்பதை நிறுத்த வேண்டும். கடல் நீரோட்டம், கடற்கரை வரைபடம், கடல் அலைகள் இவற்றில் நிபுணத்துவம் கொண்ட நிபுணர்களின் உதவியுடன் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாமல் உள்ளூர் மக்களை கலந்தாலோசித்து இயற்கையான அரண்கள் அமைத்து கடல் அரிப்பை தடுக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் விருப்பம்" என்று தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

kannanJan 20, 2025 - 12:42:21 PM | Posted IP 162.1*****