» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலையோரம் நிறுத்தப்பட்ட 20 பைக்குகள் பறிமுதல்

திங்கள் 20, ஜனவரி 2025 8:53:22 AM (IST)

தூத்துக்குடியில் சாலையோரங்களில் கேட்பாரற்று நின்ற 20 மோட்டார் பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட சாலையோரங்களில் நீண்ட நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் கேட்பாரற்று கிடப்பதாக போலீசாருக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கீழுர் ரெயில் நிலைய சுற்று வட்டார பகுதிகள் மற்றும் மின்வாரிய அலுவலக பகுதிகளில் நின்று கொண்டு இருந்த 20 மோட்டார் சைக்கிள்களை மத்தியபாகம் போலீசார் கைப்பற்றி, வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு தாசில்தார் அனுமதி பெற்று ஏலத்தில் விட போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory