» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!

திங்கள் 13, ஜனவரி 2025 10:18:02 AM (IST)



தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனந்த ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெற்றது.

தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா ஜன.4ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிகிறது. 

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (13ஆம் தேதி) ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு திருவனந்தல், 3 மணிக்கு அபிஷேகம், 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5 மணிக்கு காலசந்திபூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு ஸ்ரீஆடவல்லான் ஆனந்த ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory