» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!
திங்கள் 13, ஜனவரி 2025 10:18:02 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனந்த ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா ஜன.4ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (13ஆம் தேதி) ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு திருவனந்தல், 3 மணிக்கு அபிஷேகம், 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5 மணிக்கு காலசந்திபூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு ஸ்ரீஆடவல்லான் ஆனந்த ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
