» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : பயணிகளிடம் தீவிர சோதனை!

சனி 30, நவம்பர் 2024 4:34:18 PM (IST)



தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியாக வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப  நாய்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். 

தூத்துக்குடி விமானத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று சென்னையில் உள்ள விமான நிலைய இயக்குநர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் மற்றும் மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு விரைந்து வந்து மோப்ப  நாய்கள் கொண்டு தீவிர சோதனை நடத்தினர். 

அதில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. இது வதந்தி என தெரியவந்தது. இதனிடையே புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி - சென்னை விமானம் இன்று ரத்து செய்யப்பட்டது. ஆனால், பெங்களூரில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் வழக்கம் போல் இன்று பிற்பகல் புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த அனைவரும் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education





Arputham Hospital



Thoothukudi Business Directory