» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அடைக்கலாபுரத்தில் தொட்டில் குழந்தை அறை திறப்பு விழா: குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ச்சி

சனி 30, நவம்பர் 2024 3:12:56 PM (IST)



அடைக்கலாபுரத்தில் புனித சூசை அறநிலையும் சிறப்பு தத்துவ மையம்  சார்பில் தொட்டில் குழந்தை அறை திறப்பு மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் தேசிய தத்தெடுப்பு மாதம் நவம்பர் மாதத்தை முன்னிட்டு  தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ் தொட்டில் குழந்தை அறை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து குழந்தை தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை பிரெமில்டன் லோபா தலைமை தாங்கினார் 

பின்பு தூய சூசை அறநிலை குழந்தைகள் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளை தத்தெடுக்கும் முறைகளை குறித்து விழிப்புணர்வு நாடகத்தை தத்துரூபமாக நடத்திக் காட்டினர். இந்நிகழ்ச்சியில் அருள்பணி மேரியா,செட்ரிக் பீரிஸ்,அந்தோணி பிரஜித்,ஜேமஸ், திரு இருதய சபை, மற்றும் புனித அன்னாள் சபை அருட் சகோதரிகள், குடும்பததார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சமூகப் பணியாளர் வில்சன் பிச்சை சிறப்பாக செய்திருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors



CSC Computer Education



Thoothukudi Business Directory