» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இசைவாணி, பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஐயப்ப பக்தர்கள் முற்றுகை!

வெள்ளி 29, நவம்பர் 2024 5:31:04 PM (IST)



கானா பாடகி இசைவாணி, இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவில்பட்டி காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டனர். 

பிரபல கானா பாடகி இசைவாணி, நீலம் பவுண்டேஷன் நிறுவனர் டைரக்டர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் ஐயப்பனையும் அவரை வணங்கும் பக்தர்களையும் இழிவுப்படுத்துகின்ற வகையில் பாடல் பாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனைக் கண்டித்து இந்து அமைப்புகள் சார்பில் காவல்நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், பாடகி இசைவாணி மற்றும் திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் முன்பு ஐயப்ப பக்தர்கள் முற்றுகையிட்டு, பாடகி இசைவாணி, மற்றும் திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



New Shape Tailors

CSC Computer Education





Thoothukudi Business Directory