» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

வெள்ளி 29, நவம்பர் 2024 5:20:14 PM (IST)

இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு இளம் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்த சுப்பையா மகன் கார்த்திக் (எ) காத்திக்குமார்(32) என்பவரை முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மாதவ ராமானுஜம் இன்று (29.11.2024) குற்றவாளியான கார்த்திக் (எ) காத்திக்குமார் என்பவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 3000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார் .

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய முத்தையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர்களான நாககுமாரி மற்றும் முத்துலெட்சுமி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் எல்லம்மாள், விசாரணைக்கு உதவியாக இருந்த   தலைமை காவலர் கணேசன் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பாராட்டினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




CSC Computer Education


Arputham Hospital



Thoothukudi Business Directory