» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி: 3 வாலிபர்கள் கைது
வெள்ளி 29, நவம்பர் 2024 8:53:29 AM (IST)
தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (42) இவர் சம்பவத்தன்று மத்திய அரசு ஊழியர் குடியிப்பு பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றபோது ஒரு மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் செல்போனை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டார்களாம்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கருணாநிதி நகரை சேர்ந்த கார்த்தி (24), சத்யா நகரை சேர்ந்த பாரதி (25), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் (20) ஆகியோர் பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இளைஞர்கள் சாதி சமுதாய வேறுபாடின்றி பழக வேண்டும் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் அறிவுறுத்தல்!
வெள்ளி 16, மே 2025 8:27:34 AM (IST)

ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி தூத்துக்குடி நபர் படுகொலை : 7 பயணிகளிடம் விசாரணை!
வெள்ளி 16, மே 2025 8:19:30 AM (IST)

தூத்துக்குடி மாவட்ட சப்-ஜூனியா் ஆண்கள் ஹாக்கி அணி பயிற்சிக்கு 22 வீரா்கள் தோ்வு
வெள்ளி 16, மே 2025 8:09:32 AM (IST)

கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம் நிறைவு விழா : அமைச்சர் கீதாஜீவன் சான்றிதழ்கள் வழங்கினார்
வியாழன் 15, மே 2025 7:54:13 PM (IST)

தூத்துக்குடியில் மாடு வளர்ப்பிற்கு பயனாளிகள் தேர்வு!
வியாழன் 15, மே 2025 5:20:52 PM (IST)

அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அழைப்பு!
வியாழன் 15, மே 2025 4:52:09 PM (IST)
