» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயற்சி: 3 வாலிபர்கள் கைது

வெள்ளி 29, நவம்பர் 2024 8:53:29 AM (IST)

தூத்துக்குடியில் பெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (42) இவர் சம்பவத்தன்று மத்திய அரசு ஊழியர் குடியிப்பு பகுதியில் செல்போனில் பேசிக்கொண்டு நடந்து சென்றபோது ஒரு மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் செல்போனை பறிக்க முயன்றனர். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டதால் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டார்களாம். 

இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கருணாநிதி நகரை சேர்ந்த கார்த்தி (24), சத்யா நகரை சேர்ந்த பாரதி (25), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் (20) ஆகியோர் பெண்ணிடம் செல்போனை பறிக்க முயன்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education





Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory