» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் சமையல் எரிவாயு சிலிண்டர் திருட்டு: பட்டப்பகலில் மர்ம நபர்கள் கைவரிசை!!

வியாழன் 28, நவம்பர் 2024 5:30:52 PM (IST)



தூத்துக்குடியில் பட்டப்பகலில் வாகனத்தில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி செல்வநாயகபுரம் பகுதியில் நேற்று பகலில் தனியார் சமையல் எரிவாயு சிலிண்டர் நிறுவனம் சார்பில் அந்தப் பகுதியில் ஒரு வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்வதற்காக சிலிண்டர் கொண்டு வந்த சரக்கு வாகனத்தை நிறுத்திவிட்டு சிலிண்டர் டெலிவரி செய்ய உள்ளே சென்றனர். 

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் சமையல் எரிவாயு இருந்த வாகனத்தில் ஊழியர் இல்லாததை தெரிந்து கொண்டு சரக்கு வாகனத்தில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை தூக்கி செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல்துறையினர் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory