» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பேருந்து நிலையத்தில் 10 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

வியாழன் 7, நவம்பர் 2024 11:54:12 AM (IST)

திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் 10 பவுன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

பெரம்பலூரைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் தர்மலிங்கம் (77). இவர் கடந்த 4ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியில் உள்ள தனது மகன் புதுமனை புகுவிழா வீட்டுக்கு வந்தாராம். பின்னர் ஊருக்கு செல்வதற்காக திருச்செந்தூர் பேருந்து நிலையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது 2 வாலிபர்கள் இவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பிச் சென்று விட்டார்களாம். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும். இது குறித்து தர்மலிங்கம் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital







Thoothukudi Business Directory