» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கிறிஸ்தவ ஆலயம் அருகே வேன் மோதி மூதாட்டி பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

வியாழன் 7, நவம்பர் 2024 11:32:00 AM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்தவ ஆலயம் அருகே அமர்ந்திருந்த போது,  வேன் மோதி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி தாளமுத்து நகர் காமராஜர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் மனைவி சுப்பம்மாள் (90), இவர் அங்குள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயம் வாசலில் அமர்ந்து இருந்தார். அப்போது வேகமாக வந்த ஒரு பொலிரோ பிக்அப் வேன், கோவில் வாசலில் அமர்ந்திருந்த மூதாட்டி சுப்பம்மாள் மீது மோதியது. 

இதில் அவர் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலமுருகன் வழக்குப் பதிந்து வேனை ஓட்டி வந்த தூத்துக்குடி சிதம்பர நகரை சேர்ந்த ஐயப்பன் மகன் ஆனந்த் டேவிட் (59) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors

CSC Computer Education




Thoothukudi Business Directory