» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு!

வியாழன் 7, நவம்பர் 2024 11:17:40 AM (IST)

தூத்துக்குடி அருகே காட்டுப்பகுதியில் விஷம் குடித்து மயங்கிக் கிடந்த  வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள உமரிக்கோட்டை வரதராஜபுரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் ராமமூர்த்தி (25), இவர் கடந்த ஒன்றாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பின்னர் வீடு திரும்ப இல்லை. குடும்பத்தினர் அவரை தேடிச் சென்றபோது அங்குள்ள காட்டுப் பகுதியில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டப்பாறை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வைரஸ் வழக்கு பதிவு செய்து, அவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education


New Shape Tailors





Thoothukudi Business Directory