» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அருகே மின்னல் பாய்ந்து பெண் பலி!

வியாழன் 31, அக்டோபர் 2024 9:06:46 AM (IST)

தூத்துக்குடியை அருகே பேரூரணியில் பலத்த மழையின்போது, மின்னல் பாய்ந்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், பேரூரணியைச் சேர்ந்த அன்னராஜ் மனைவி அன்னதங்கம் (47). இவர் உள்ளிட்ட சிலர், நேற்று ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைக்கு சென்றனர். அப்போது, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அவர்கள் அங்குள்ள மரம் அருகே ஒதுங்கினராம். அந்த மரத்தின் மீது மின்னல் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. 

இதில், சிலர் மயங்கி விழுந்தனர். அவர்களில், அன்னதங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலின்பேரில், தட்டப்பாறை போலீசார் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

m.sundaramOct 31, 2024 - 07:18:51 PM | Posted IP 162.1*****

Since she died while on govt duty adequate compensation should be granted to her family. Village Panchayat President should initiate action to Dist Collector through Panchayat Union. concerned MLA should visit to the residence of the victim and provide all possible assistance to the victim family. Jai Hind.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital






Thoothukudi Business Directory