» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: வாலிபருக்கு போலீஸ் வலைவீச்சு

செவ்வாய் 3, செப்டம்பர் 2024 11:26:42 AM (IST)

தூத்துக்குடியில் ஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். 
 
தூத்துக்குடி டூவிபுரத்தைச் சேர்ந்தவர் ராம கிருஷ்ணன் மனைவி கல்யாணி (40) இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தனது ஸ்கூட்டியில் டுவிபுரம் ரோட்டில் தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த ஒரு வாலிபர் கல்யாணி கழுத்தில் அணிந்திருந்த தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார். 

இதையறிந்த கல்யாணி அவனை காலால் எட்டி உதைத்ததில், அந்த வாலிபர் நிலை தடுமாறி பின்னர் சுதாரித்துக் கொண்டு பைக்கில் வேகமாக தப்பிச்சென்றுவிட்டார். இதனால் கல்யாணியின் நகை தப்பியது. இது குறித்து அவர் மத்திய பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்கு பதிவு செய்து, நகை பறிக்க முயன்ற வாலிபரை தேடி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors




Thoothukudi Business Directory