» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நாளை மக்கள் குறைதீர்க்கும் முகாம் - ஆணையர் தகவல்
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 12:36:44 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் நாளை (ஆக.14) புதன்கிழமை மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கைகளை விரைந்து முடிக்கும் வகையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை தோறும் மண்டலம் வாரியாக கோரிக்கைகளை கேட்டு அறிந்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் மேயர் தலைமையில் தொடர்புடைய அலுவலர்கள் மண்டல வாரியாக முகாம்களில் கலந்து கொண்டு பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக அடுத்த மண்டல முகாமானது வருகின்ற புதன்கிழமை (14.8.24) அன்று நடைபெற உத்தேசிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, மேற்படி தினத்தில் மேற்கு மண்டல அலுவலகத்தில் வைத்து காலை 10.00 மணிக்கு மேற்கு மண்டலத்திற்குட்பட்ட (வார்டு எண்கள் 15 முதல் 19,30 முதல் 37,42,44 மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்கள்50,51 மட்டும்) ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட உள்ளது.
மேற்படி முகாமில் சொத்து வரி நிர்ணயம், சொத்துரி பெயர் மாற்றம், திருத்தங்கள், புதிய குடிநீர் இணைப்பு,தண்ணீர் கட்டண பெயர் மாற்றம், தண்ணீர் உபயோக கட்டண விகிதங்கள் மாற்றம், கட்டிட அனுமதி, ஆக்கிரமிப்புகள் அகற்றுதல், பொதுச் சுகாதாரம், உரிமை ஆணை கட்டணங்கள், தொழில்வரி, பாதாள சாக்கடை, பிறப்பு இறப்பு சான்று மற்றும் திருத்தங்கள் உள்ளிட்ட மாநகராட்சி சேவைகள் குறித்து கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளிக்கலாம். எனவே, மேற்படி முகாம்களில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை கோரிக்கை மனுக்களாக வழங்கி பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையர்தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
KumarAug 13, 2024 - 12:49:33 PM | Posted IP 172.7*****
கீழசண்முகபுரம் பகுதிக்கு அதிகாரிகளை இருசக்கரவாகனத்தில் பயணம் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன்
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை அளவு விபரம்!
சனி 22, மார்ச் 2025 12:43:10 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் உலக தண்ணீர் தின விழா
சனி 22, மார்ச் 2025 11:44:54 AM (IST)

தமிழ்ச் செம்மல் விருது பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
சனி 22, மார்ச் 2025 10:43:47 AM (IST)

மன்னர் தேர்மாறன் தபால் தலை வெளியிட வேண்டும்: பாஜக மாநில துணைத் தலைவரிடம் கோரிக்கை!
சனி 22, மார்ச் 2025 10:25:43 AM (IST)

நகைக்கடை அதிபரை கடத்தி கொல்ல சதித்திட்டம் : தூத்துக்குடி ரவுடி மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு!
சனி 22, மார்ச் 2025 8:51:59 AM (IST)

அனல் மின்நிலைய தீவிபத்து குறித்து உயர்மட்ட குழு ஆய்வு : ஊழியர்களிடம் விசாரணை!
சனி 22, மார்ச் 2025 8:30:08 AM (IST)

SHANMUGA SUNDARAMAug 13, 2024 - 03:15:59 PM | Posted IP 162.1*****