» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
போலீசாருக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது
செவ்வாய் 13, ஆகஸ்ட் 2024 11:27:52 AM (IST)
கோவில்பட்டியில் போலீசாருக்கு மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்குத் தாய் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். எட்டயபுரம் சாலையில் உள்ள பல்லக்கு ரோடு சந்திப்பு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை நோக்கி போலீசார் சென்றனர். போலீசாரை பார்த்தவுடன் 2பேரும் தப்பிக்க முயற்சித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் சுற்றிவளைத்து 2பேரையும் பிடித்தனர். அப்போது அந்த 2பேரும் போலீசாரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். அதையடுத்து போலீசார் அந்த 2 பேரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் குமார் (23), வடக்குத்திட்டங்குளம் முத்து ராமலிங்கத்தேவர் காலனியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் நாகராஜன் (31) என தெரிய வந்தது. இதுகுறித்து கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைதுசெய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றிவந்த லாரி மீது வேன் மோதல்: 12 பெண்கள் உட்பட 15பேர் காயம்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:27:22 PM (IST)

பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது : கனிமொழி எம்பி பேட்டி
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:31:50 AM (IST)

தூத்துக்குடியில் சைக்கிள் வழித்தடம்: கனிமொழி எம்பி ஆய்வு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:39:41 AM (IST)

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:26:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:17:58 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: மேலும் 2பேர் கைது!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:58:39 AM (IST)
