» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கலைஞர் நூற்றாண்டு விழா நூலகம் திறப்பு விழா

ஞாயிறு 4, ஆகஸ்ட் 2024 6:10:29 PM (IST)



தாளமுத்துநகரில் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலைஞாின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் இளைஞர் அணி சார்பில் நூலகம் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தாளமுத்துநகர் மெயின் ரோட்டில் நடைபெற்றது.

கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழாவிற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் ஓன்றிய திமுக செயலாளருமான சரவணக்குமார் முன்னிலையில், சண்முகையா எம்.எல்.ஏ., மாநில திமுக இளைஞர் அணி துணைச்செயலாளர் இன்பாரகு, ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகள் வழங்கி நூலகத்தை பார்வையிட்டு நல்ல முறையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பராமாிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory