» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி : அரசு மருத்துவமனையில் 2 பேர் அனுமதி!
ஞாயிறு 4, ஆகஸ்ட் 2024 5:53:27 PM (IST)
தூத்துக்குடியில் வீட்டில் உள்ள கிணற்றை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி வீட்டு உரிமையாளர் கணேசன் மற்றும் அவரது உறவினர் மாரிமுத்து ஆகியோர் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து நேரு காலனி அருகே உள்ள ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், இவரது வீட்டில் 18 அடி ஆழமுள்ள உரை கிணறு இருந்துள்ளது இந்த கிணறு வெகு நாளாக சுத்தம் செய்யப்படாமல் இருந்ததால் தண்ணீரில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று பிற்பகல் கணேசன் தனது உறவினர் மாரிமுத்து உடன் சேர்ந்து கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது கிணற்றில் வாலி ஒன்று தவறி விழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து கணேசன் வாலியை எடுப்பதற்காக கிணற்றில் கயிறை கட்டி இறங்கி உள்ளார். ஆனால் கிணற்றில் விஷவாயு உருவாகி இருந்துள்ளது. இதில், கிணற்றில் இறங்கிய கணேசன் விஷவாயு தாக்கியதில் மயக்கம் அடைந்து கிணற்றில் உள்ளே சிக்கியுள்ளார். இதை எடுத்து மேலே இருந்த மாரிமுத்து கணேசனை மீட்க கிணற்றில் இறங்கியுள்ளார். இதில் மாரிமுத்தும் விஷவாயு தாக்கி அங்கே மயக்கம் அடைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து அங்கே இருந்த கணேசன் உறவினர்கள் இரண்டு பேர் உள்ளே சென்ற மேலே வராததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதை பார்த்து அருகில் இருந்த சேசுராஜ் மற்றும் பவித்திரன் ஆகியோர் கிணற்றில் மயக்கம் அடைந்து இருந்தவர்களை மீட்க இறங்கி உள்ளனர். இதில் ஜேசுராஜ் மற்றும் பவித்ரன் ஆகியோருக்கு விஷ வாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் மேலே வந்து மயக்கம் அடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் மயக்கம் அடைந்த பவித்ரன் மற்றும் சேசுராஜ் ஆகியோரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக தாளமுத்து நகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறை அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையிலான தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வீரர் ஆனந்தை கயிறு மூலம் உள்ளே இறக்கி உள்ளே மயங்கி இருந்த மயங்கிய நிலையில் இருந்த கணேசன் மற்றும் மாரிமுத்து மேலே மீட்டுக் கொண்டு வந்தனர். ஆனால் இருவரும் ஏற்கனவே விஷவாயு தாக்கியதில் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.
இதை அடுத்து உயிரிழந்த கணேசன் மற்றும் மாரிமுத்து உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தாளமுத்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் கிணற்றில் விஷவாயுத்தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)
