» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புது வாழ்வு சங்கம் சார்பில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா!
ஞாயிறு 4, ஆகஸ்ட் 2024 5:43:04 PM (IST)

நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் மற்றும் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் இணைந்து ஆனந்தபுரம் அருகில் உள்ள கருவேலம்பாடு கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ளளவு மேல் நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் மற்றும் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் இணைந்து ஆனந்தபுரம் அருகில் உள்ள கருவேலம்பாடு கிராமத்தில் 60,000 லிட்டர் கொள்ள ளவு மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா கருவேலம்பாடு கிரா மத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற்றது.
விழாவிற்கு கருவேலம்பாடு ஊராட்சி மன்றத் தலைவர் இ.நயினார் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் ச.ஜனகர் முன்னிலை வகித்தார். மேல்நிலை குடி நீர்த்தேக்க தொட்டியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனரும், புது வாழ்வு சங்க நிறுவனருமான சகோ.மோகன் சி. லாசரஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் ஊர் பொதுமக்கள், ஊராட்சிமன்ற வார்டு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)
