» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் : கண்காணிக்கும் பணி தீவிரம்
புதன் 10, ஜூலை 2024 5:47:38 PM (IST)
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியேற்ற நிலையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்களில் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயாரிக்க ஒரு உத்தரவு பிறப்பித்தார். அதன் அடிப்படையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் 1,750 ரவுடிகள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 400 ரவுடிகள் மட்டுமே சிறையில் இருந்து வெளியில் உள்ளனர். இந்த ரவுடிகளை ஒரு ரவுடிக்கு ஒரு போலீஸ் வீதம் நெருக்கமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களை தொடர் கண்காணிப்பில் வைப்பதற்கு காவலர்கள் 2 ஷிப்ட்டுகளாக நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை மேற்கொள்ள இருக்கின்றனர்.
ரவுடிகளை கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை தகவல்களாக திரட்டி, காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ரவுடிகளுக்கு உதவினாலும், அடைக்கலம் கொடுத்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம் : தூத்துக்குடி எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் அழைப்பு!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)

கோவில்பட்டியில் மாரத்தான் போட்டி: தூத்துக்குடி கல்லூரி மாணவர் முதலிடம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:27:28 PM (IST)

கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தூத்துக்குடி வாலிபர் படுகொலை... சேலத்தில் பயங்கரம்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 3:16:01 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 3:07:14 PM (IST)

மதுகுடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொடூர கொலை : நண்பர் வெறிச்செயல்!!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:30:43 PM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: கனிமொழி எம்.பி தொடங்கி வைத்தார்!
செவ்வாய் 15, ஜூலை 2025 12:08:10 PM (IST)

காவலன்Jul 10, 2024 - 07:07:31 PM | Posted IP 172.7*****