» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் நிலை தடுமாறி விபத்து: வாலிபர் பலி!

செவ்வாய் 9, ஜூலை 2024 11:33:28 AM (IST)

தூத்துக்குடியில் இருந்து நெல்லை நோக்கி சென்றபோது வல்லநாடு அருகே பைக் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். 

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வவ்வால் தொத்தி கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் மாரி பாண்டியன் (39). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் வேலைக்காக பைக்கில் தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்தார். 

வல்லநாடு அருகே உள்ள ஒரு கல்லூரி அருகே போகும் போது திடீரென பைக் நிலை தருமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory