» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி எம்.பி.யாக கனிமொழி பதவியேற்பு!

செவ்வாய் 25, ஜூன் 2024 7:58:22 PM (IST)

 

மக்களவையில் தூத்துக்குடி தொகுதியின் உறுப்பினராக கனிமொழி கருணாநிதி இன்று பதவியேற்றுக் கொண்டார். 

தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். இதன் மூலம் கனிமொழி கருணாநிதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தூத்துக்குடி தொகுதியில் மற்ற வேட்பாளரை விட கனிமொழி கருணாநிதி 72.65 சதவீத வாக்கு வித்தியாசம் பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

இந்நிலையில், 18வது மக்களவையில், தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்றனர். இதில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தற்காலிக சபாநாயகர் ராதா மோகன் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 


மக்கள் கருத்து

SudhaJun 26, 2024 - 01:46:15 AM | Posted IP 162.1*****

இல்லம் தேடி கல்வி மீண்டும் செயல் படவேண்டும் இது அனைத்து பெற்றோர் கள் கோரிக்கை. ஏன் என்றால். ஈவினிங் டைம் குழந்தை களுக்கு. கல்வி கற்று கொடுத்து. எங்களின். சுமைகளை குறைது தனர் இல்லம் தேடி கல்வி. ஆகையால் மீண்டும் செயல்பட வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory