» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக ஆர்ப்பாட்டம்!
திங்கள் 24, ஜூன் 2024 11:14:40 AM (IST)

கள்ள சாராயம் விற்பனையை தடுக்க தவறியதாக திமுக அரசை கண்டித்து தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 52 பேர் பலியானார். மேலும் ஏராளமான சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து இன்று தமிழக முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல் தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில் விவிடி சிக்னல் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜ் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், மாநகராட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் திருச்சிற்றம்பலம், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், மண்டல செயலாளர்கள் முருகன், பொன்ராஜ் உட்பட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்தும் முதல்வர் ஸ்டாலின் உடனே பதவி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்தனர். இதையடுத்து சுமார் 15 நிமிடம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)
