» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: ஜூன் 26-க்கு ஒத்திவைப்பு
வியாழன் 20, ஜூன் 2024 7:47:17 AM (IST)
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அமைச்சரின் மகன்கள் ஆனந்த பத்மநாதன், ஆனந்த ராமகிருஷ்;ணன், ஆனந்த மகேஸ்வரன் மற்றும் சகோதரர்கள் சண்முகநாதன், சிவானந்தன் ஆகியோர் ஆஜராகினர்.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் என மாவட்ட நீதிமன்றத்தில் மனு செய்திருந்தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வக்கீல் ஜின்னா அமலாக்க த்துறை மனுவிற்கு எதிராக ஆஜராகி வாதாடினார். சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் அமலாக்கத் துறை வழக்குரைஞர் ரமேஷ் ஆஜராகி வாதாடினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஐயப்பன், இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூன் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
