» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும் : பாஜக கோரிக்கை!!
புதன் 19, ஜூன் 2024 5:25:29 PM (IST)

மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லவிருக்கும் வந்தே பாரத் ரயிலை தூத்துக்குடி வரை இயக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏவிடம் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க தலைவர், சித்ராங்கதன் அளித்துள்ள மனுவில், "தூத்துக்குடி இந்தியாவில் அதிக அளவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் இடங்களிலொன்றாகவும் ஏற்றுமதி சார்ந்த தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ள நகரமாகவும் திகழ்ந்து வருகிறது.
மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்திசெய்யப்படும் உப்பானது வெளிநாடு மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான மீன்பிடித் தொழிலில் சிறந்து விளங்குவதால் வெளிநாடுகள் மற்றும் நாட்டின் பிறபகுதிகளுக்கு மீன்கள் இங்கிருந்து பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இத்தகைய வணிக ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த தூத்துக்குடி மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள், வணிகர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோர் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இதைப்போல் பெங்களூரில் உள்ள ஜ.டி. நிறுவனங்களில் தென் தமிழகத்தைச் சார்ந்த இளம் தலைமுறையினர் பணியாற்றி வருகின்றனர்.
மேலும் உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் திருக்கோவில் மற்றும் பனிமயமாதா ஆலயத்திற்கு பல்வேறு பகுதியிலிருந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் தூத்துக்குடிக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் பயணத்தை எளிதாக்கும் வண்ணம் தற்போது மதுரையில் பெங்களுரு வரையில் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் இரயில் சேவையை தூத்துக்குடி மாவட்டம் வரை நீட்டிக்க பாரதப்பிரதமர் நரேந்திர மோடியிடம் பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி!!
வெள்ளி 23, மே 2025 5:00:18 PM (IST)

பட்டினமருதூரில் தொல்லியல் அகழ்வாய்வு: ட்ரோன் மூலமாக அளவீடு பணிகள் தொடங்கியது!
வெள்ளி 23, மே 2025 4:51:56 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட 25 பேருக்கு தலா ரூ50 ஆயிரம் நிதி : அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
வெள்ளி 23, மே 2025 4:22:20 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)

அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு: ஆட்சியர் தகவல்
வெள்ளி 23, மே 2025 4:02:59 PM (IST)

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவை
வெள்ளி 23, மே 2025 3:47:36 PM (IST)

UNMAIJun 19, 2024 - 07:03:08 PM | Posted IP 172.7*****