» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் கஞ்சா வழக்கில் வாலிபர் கைது!

புதன் 19, ஜூன் 2024 4:50:49 PM (IST)

திருச்செந்தூரில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  உத்தரவின்படி திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  வசந்தராஜ்  மேற்பார்வையில் திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர்  சுந்தரமூர்த்தி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர்  பாலசுப்பிரமணியன் தலைமையிலான உட்கோட்ட தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திருச்செந்தூரில் உள்ள ஒரு பள்ளி அருகே  சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் காயல்பட்டினம் காட்டு தைக்கா தெருவை சேர்ந்த பாபு ஜான் மகன் ஜான் பாட்ஷா (25) என்பதும், அவர் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 180 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital


CSC Computer Education




Thoothukudi Business Directory