» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சீற்றம் : மீன்வளத் துறை எச்சரிக்கை!
புதன் 19, ஜூன் 2024 4:38:20 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதிகளில் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று மின்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் (மீன்பிடித்துறைமுக மேலாண்மை) தி.விஜயராகவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 19.06.2024 முதல் 23.06.2024 வரையிலான தினங்களில் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா கடற்பகுதிகளில் சுழல்காற்றானது மணிக்கு 35-45 கி.மீ வேகத்துடன் வீசக்கூடிய காற்றானது இடையிடையே 55 கி.மீ வேகம் வரை வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20.06.2024 அன்று இரவு 11.30 மணிவரையிலான காலங்களில் தூத்துக்குடி மாவட்ட கடற்பகுதியான வேம்பார் முதல் பெரியதாழை வரை அலைகளின் சீற்றமானது 2.1 மீட்டர் முதல் 2.2 மீட்டர் நீளம் வரை எழக்கூடும் என்று கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் : 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:38:35 PM (IST)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)
