» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!
செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக்குகள் திருடுபோனது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்த பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த 3 பைக்குகள் கடந்த 1ம் தேதி இரவு திருடுபோய்விட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 லடசம் ஆகும்.
இதுகுறித்து தலைமைக் காவலர் முரளி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் மகன் ஆறுமுகம் (19) உள்பட 4பேர் பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் 3பேரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பு பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா: மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு
செவ்வாய் 15, ஜூலை 2025 8:56:34 PM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பேர்ல்சிட்டி நிர்வாகக் குழு பாெறுப்பேற்பு விழா
செவ்வாய் 15, ஜூலை 2025 8:43:01 PM (IST)

தூத்துக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் : அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
செவ்வாய் 15, ஜூலை 2025 8:11:14 PM (IST)

ஆற்று மணல் திருடிய வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 15, ஜூலை 2025 8:03:03 PM (IST)

தூத்துக்குடியில் 19ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 15, ஜூலை 2025 5:10:46 PM (IST)

காவல்துறை சார்பில் குறைதீர்க்கும் மனு கூட்டம்!
செவ்வாய் 15, ஜூலை 2025 4:02:00 PM (IST)
