» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக் திருட்டு : வாலிபர் கைது!

செவ்வாய் 3, அக்டோபர் 2023 11:12:06 AM (IST)

தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் 3 பைக்குகள்  திருடுபோனது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி தாளமுத்துநகர் காவல் நிலைய வளாகத்தில் பல்வேறு வழக்குகளில் போலீசார் பறிமுதல் செய்த பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கிருந்த 3 பைக்குகள் கடந்த 1ம் தேதி இரவு திருடுபோய்விட்டது. இதன் மதிப்பு ரூ.2.5 லடசம் ஆகும். 

இதுகுறித்து தலைமைக் காவலர் முரளி அளித்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த முருகேசன் மகன் மகன் ஆறுமுகம் (19) உள்பட 4பேர் பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து ஆறுமுகத்தை போலீசார் கைது செய்து 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் 3பேரை தேடி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital










Thoothukudi Business Directory